உ
மஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்
- இந்த கலியுகத்தில் மக்கள் ஏழேழு ஜென்மங்களில் செய்துள்ள பாவங்களை போக்கி நலம்பெற செய்திடவே இந்த புண்ணிய பூமியில் அவதரித்தேன்.
- ஸ்ரீகண்டிநத்தத்தில் நானூறு ஆண்டுக்கு முன்பு காளிகாம்பாள் என்ற பெயரில் பக்தர்களை காத்து வந்த நான் தற்சமயம் நாகாத்தம்மனாய் காத்தருள் புரிந்து வருகிறேன்
- வரும்போதே நல்லா சொல்வாங்களா? கூப்பிட்டு சொல்வாங்களா? எப்படி சொல்வாங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தியே உன் பிரச்சனையை நான் தீர்க்கிறேன்.
- ஏம்மா என்னை இப்படி சோதிக்கிற? நான் என்ன பாவம் செஞ்சே? ஏன் இப்படி அவதிபடுகிறேன்? என்னை நீ தாம்மா காப்பாத்தனும் என்று வந்தியே, கவலைப்ப்டாதே நான் காப்பாத்தறேன்.
- எனக்கு வம்சத்தை கொடும்மா, வாரிசை கொடும்மா, அக்கம்பக்கம் பேசறத என்னால் தாங்க முடியல என்று அழுதுபுலம்பி வந்திருக்க. கவலைப்படாதே நான் உனக்கு அமைச்சிதாரேன்.
- என் புள்ளைக்கு நல்ல புத்திய கொடும்மா, படிப்பை கொடும்மா, காப்பாத்தி கொடும்மான்னு அழுதுபுலம்பி வந்திருக்க கவலைப்படாதே நான் அமைச்சி தாரேன் போ?
- நான் கொடுத்த அம்சத்தை நான் காப்பாத்தி தாரேன் கவலைபடாதே.
- புது முயற்சிகள் அனுகூலமாகும் தொடங்கலாம்.
- நீ இருக்கும் இடம் சரியில்லை, மாற்றிக்கொள்.
- மண்ணுக்கும் வினையில்லை மக்களுக்கும் கேடியில்லை, கிரக நிலைதான் சரியில்லாம கஷ்டப்படுத்தது அதை நான் சரி பண்ணிதாரேன்.
- உன் வீட்டிற்கு வந்து படமெடுத்து ஆடியதே நான்தான் உனக்கு நல்லது செய்ய, நான்தான் உன்ன இங்கு வரவழைச்சேன்.
- மூன்று பச்சிலை சாறு உள்ளுக்கு கொடுக்க உன் பிரச்சனை தீரும்.
- முழு மனசோட நீ செய்த பரிகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது சுபமேஅனுகூலமாகும் சுபம்.
- நான் நடத்தி தருகிறேன் நீ ஏன் கவலைப்படறே போ.
- மேற்கு பார்த்த சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனைகள் செய்து ஆலயத்திற்கு வா.
- நவக்கிரகத்தில் புதனுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வா.
- உனக்கு கர்மம் நடக்கிற காலம் வந்துவிட்டதே, இருள் ௲ழ்ந்து விட்டதே, என்னை காப்பாற்றி கொடும்மான்னு வந்திருக்க.
- தடையை கழட்டுடா, தடையை கொழுத்துடா, தடையை எடுடா, தடையை எடுத்து கொண்டுஅனைவரின் தலையை சுற்றி கடலில் விட்டு தலை முழுகி வா.
- என்னை மீறி மருத்துவம் பாக்கிறியே, மருந்து மாத்திரை சாப்பிடுறியே குணமடையுதா? தவிர்த்துவிடு, அனைத்தையும் நான் பாத்துக்கிறேன்.
- புத்தியை கொடுக்கனும், அமைதியைக்கொடுக்கனும், அனுகூலமாக்கனும் என்று வந்திருக்கிறீயே. நான் உனக்கு தரேன்.
- பருவத்திற்கு வந்திருந்து இரண்டுபேறும் சேர்ந்து பச்சிலைச்சாறு பருகி என்னை வணங்கி சென்றாள் உனக்கு வம்சத்தை கொடுத்து காப்பேன்.
- வேலைக்கு போகமல் காசு கேட்டால் கிடைக்காது.
- நினைத்தது கிடைக்கனும் என்று ஏங்கி வந்திருக்க அதுவே அமைச்சி தாரேன்.
- நம்பிக்கையோடு துணிஞ்சி இறங்கி இருக்க சுபமே நடக்கும்.
- ஆவேசம் வேண்டாம், கோபம் வேண்டாம் பொறுமையே அற்புதமாக்கும், அனுகூலமாகும்.
- விதைச்ச அன்னைக்கே அறுவடை செய்யமுடியாது, பொறுமையே வெற்றியைக்கொடுக்கும்.
- பரிகாரத்தை காலத்தோடு செய்தால்தான் பலன் கிடைக்கும், உனக்கு நேரம் கிடைக்கையில் செய்தால் பலன் இல்லை.
- சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் பெண்களால் ஏற்பட்ட சாபம் போகும். பெண்ணால் ஏற்பட்ட சாபம் தீர்ந்தால்தான் பலன் கிடைக்கும்.
- முடிவோட பாகங்கள் அடுத்த வாரத்தில் சொல்கிறேன்.
- பட்டகஷ்டத்தோடு அடுத்துவர பல கஷ்டத்தை அனுபவித்துதான் ஆகனும்.
- எங்கபோய் பார்த்தாலும் நடக்கவில்லை, பலன் இல்லை எம்பிள்ளைக்கு வம்சத்தை கொடு, வேலையைக்கொடு, பாவ வினைகளிலிருந்து தீர்வை கொடு என்று என்னை நாடி வந்திருக்க போ நான் அமைச்சி தரேன்.
- பதிமூன்று தினங்கள் கடுமையான கண்டம் நான் கொடுக்கும் முழுக்கனியை உன்கூட எப்போது வைத்திரு.
- இருக்க இடம் கொடு, தொழில் அமைத்துக்கொடு சீக்கு, பினி, பீடைகளிலிருந்து விடுதலை கிடைக்கனும் என்று வந்திருக்க நான் அமைச்சி தரேன்.
- சிறுக சிறுக பெருகும் நேரம் வந்துவிட்டது அதனை நான் பாத்துக்குவேன்.
- என் தோஷத்தை வைத்துக்கொண்டு முயற்சித்தால் நன்மைக்கு வராது. தோஷத்திற்கு பரிகாரம் செய் பலன் தருகிறேன்.
- ஓம் என்றாலும், ஓம் சக்தி என்றாலும், மஹாசக்தி என்றாலும் எல்லாம் ஒன்றுதான், அனைத்திலும் நானே, பிரிவு இல்லை, பேதம் இல்லை.
- பரிகாரம் செய்யும்போதும், தானம் செய்யும்போதும் முழுமனதுடன் உம்மால் முடிந்ததைசெய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதுதானே என்று அறை மனதுடன் செய்தால் ஏதுவும் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.